/indian-express-tamil/media/media_files/2025/08/24/leftover-rice-recipe-2025-08-24-14-32-43.jpg)
உங்களிடம் மீந்து போன சாதம் இருந்தால், அதை வைத்து ஒரு சுவையான, ஆரோக்கியமான மற்றும் எளிமையான காலை உணவை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த ரெசிபி, மிச்சமான உணவை வீணாக்காமல் இருக்க ஒரு நல்ல வழி. இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று சுகன்ஸ்ஹோம் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மீந்து போன சாதம் - 1 கப்
வெள்ளை ரவை - 2 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - 1 சிறிய துண்டு
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2
இட்லி பொடி - 1 தேக்கரண்டி
சில்லி ஃப்ளேக்ஸ் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
முதலில், மிக்ஸியில் மீந்து போன சாதம், வெள்ளை ரவை, தயிர், உப்பு, சீரகம், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு சற்று கெட்டியான மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும். இதனை ஒரு இட்லி தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி, மாவை இட்லிகளாக ஊற்றவும். இட்லி வேகவைக்கும் பாத்திரத்தில் வைத்து 10-15 நிமிடங்கள் வேகவிடவும். சுவையான மற்றும் மென்மையான இட்லி தயார். இதனை சிறுதுண்டுகளாக நறுக்கி பின்னர் இதை தாளிக்க வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இட்லி பொடி மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். பின்னர் இதில் நறுக்கிய இட்லி துண்டுகளை சேர்த்து தாளித்து இறக்கினால் போதும்.
இதை தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சூடாகப் பரிமாறலாம். இல்லை என்றால் அப்படியே சாப்பிடலாம். இந்த ரெசிபி, மீந்து போன சாதத்தை ஒரு புதுமையான உணவாக மாற்றுவதுடன், குழந்தைகளுக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.