எலுமிச்சை சாறில் பல மருத்துவ நன்மைகள் இருக்கிறது. இந்நிலையில் நிம்பு பானி என்று அழைக்கப்படும் எலுமிச்சை ஜூஸ் இதில், எலுமிச்சை சாறு, உப்பு, சிறிது இனிப்பு சேர்க்கப்படும். வெயில் காலத்தில் இது அதிகம் பருகப்படுகிறது.
இந்நிலையில் வெயில் நமது கண்களை மிகவும் பாதிக்கும். அதிகமாக யு.வி. கதிர்களுக்கு கண்களை வெளிப்படுத்தினால், கண்களில் வரட்சி ஏற்படும். மேலும் கண்கள் தொடர்பான பல்வேறு சிக்கல் ஏற்படலாம். இதனால் எலுமிச்சை ஜூஸ் பருக வேண்டும்.
வைட்டமின் சி, அதிகம் இருக்கிறது. இதனால் நமது கண்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட் இதில் இருப்பதால், நமது கண்கள், சேதமடையாமல் பாதுகாக்கப்படுகிறது.
இதில் வைட்டமின் ஏ இருப்பதால், நமது பார்வைத் திறனை அது அதிகமாக்கும். இந்நிலையில் வைட்டமின் ஏ குறைபாட்டால் பார்வை குறைபாடு ஏற்படும். குறிப்பாக தெளிவற்ற பார்வை ஏற்படும் அபாயம் உள்ளது.
எலுமிச்சை சாறில் லூடின்( lutein) என்ற சத்து இருக்கிறது. சியாந்தினினும் (zeaxanthin)இருக்கிறது. வயதானால் கண்களில் மத்திய பார்வை மங்கலாக தெரிய ஆரம்பிக்கும் இந்நிலையில் இந்த இரண்டு சத்துக்களும், இந்த குறைபாட்டை ஏற்படாமல் தடுக்கும்.
கண்களுக்கு செல்லும், ரத்த குழாய்களை இது வலுவாக்க உதவும். மேலும் ரெட்டினா-வுக்கு ரத்தம் செல்வதை ஊக்குவிக்கும். இதனால் ஒட்டுமொத்த கண்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.