மாறிவரும் வாழ்க்கை முறையால், யூரிக் அமிலம் அதிகரிக்கிறது. பியூரின் அதிகமாகும் காரணத்தல் இது ஏற்படுகிறது.
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால், மூட்டு வலி, உட்காருவதில் சிரமம், விரல்களில் விக்கம் என பல வகையான பிரச்சனைகள் உடலில் ஏற்படும், யூரிக் அமிலம் உருவாகும்போது, இந்த அமிலத்தின் சிறிய துண்டுகள் மூட்டுகள், தசைகள் மற்றும் திசுக்களில் சேர்ந்துகொள்ளும். இந்நிலையில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த எலிமிச்சை சாறு போதுமான தீர்வை கொடுக்கும்.
எலுமிச்சை சாறு யூரிக் அமில அளவை சமப்படுத்த உதவுகிறது. மேலும் இது உடலை காரத்தன்மையுடன் மாற்றவும் பயன்படுகிறது. இரத்தம் மற்றும் மற்ற திரவங்களின் பி.எச் அளவை எலுமிச்சை சாற்று உயர்த்த உதவுகிறது. ஒரு ஆய்வின் தகவல் இவ்வாறு குறிப்பிடுகிறது. எலுமிச்சை சாறு குடித்தால் உடலில் கால்சியம் கார்பனேட் அதிகமாக வெளிப்படும். இவை யூரிக் அமிலத்துடன் சேர்த்து, அதை உடைக்கிறது. இதனால் உடலில் உள்ள யூரிக் அமில அளவு குறையும்.
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த ஒரு நாளைக்கு 2 முறை எலுமிச்சை சாறை குடிக்கலாம். மேலும் எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
மேலும் சூடான நீரில் எலுமிச்சை சாறை கலந்து குடித்தால், யுரிக் அமிலம் கட்டுப்படும். இந்நிலையில் வைட்டமின் சி இதில் இருப்பதால், செரிமானத்தை சீராக வைத்துக்கொள்ளும். எடையும் கட்டுப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil