குழந்தைகளின் பள்ளிக்கு மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் எடுத்து செல்லும் ஒரு உணவு இந்த எலுமிச்சை சாதம். இதனை தயார் செய்ய மிக குறைந்த நேரமே பிடிக்கும். எனவே இதனை அடிக்கடி வீட்டில் செய்வார்கள். இந்த பதிவில் எலுமிச்சை சாதம் செய்வதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
எண்ணெய்
கடுகு
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
கடலை
காய்ந்தமிளகாய்
பச்சைமிளகாய்
கருவேப்பிலை
மஞ்சள் தூள்
பெருங்காயத்தூள்
எலுமிச்சை பழம்
உப்பு
சாதம்
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்ததும் அதனுடன் கடலை, காய்ந்த மிளகாய் மற்றும் பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதனுடன் மஞ்சள்தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து அடுப்பினை அனைத்து விடுங்கள். பெருங்காயத்தூள் தான் எலுமிச்சை சாதம் ருசிக்கும் வாசனைக்கும் நன்றாக இருக்கும்.
பிறகு ஒரு நிமிடம் கழித்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இதனுடன் நாம் சமைத்து வைத்துள்ள சாதம் சேர்த்து நன்றாக கிளறினால் சுவையான எலுமிச்சை சாதம் தயார். இதற்கு உருளைக்கிழங்கு பொறியல் சுவையாக இருக்கும்.
இந்த ரெஸிபி செய்து கொடுக்கும் அன்று குழந்தைகளது டிஃபன் பாக்ஸ் காலியாகதான் வரும். இந்த முறையில் லஞ்ச் செய்து கொடுத்தால் குழந்தைகள் விருப்பப்பட்டு சாப்பிடுவார்கள்.