இன்னைக்கு ஒரு தரமான டேஸ்ட்ல சாம்பார் சாதம் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். ஹோட்டல்ல போய் கூட நீங்க சாப்பிட வேண்டாம் இனிமே வீட்லயே ரொம்ப பெர்ஃபெக்ட்டா வரும். எப்பவும் நம்ம பண்ற மெத்தட்ல இல்லாம இன்னைக்கு ஒரு டிஃபரண்டான மெத்தட்ல பண்ண போறோம். இது உங்க வீட்டுல இருக்கற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இதை எப்படி செய்வது என்று டீக்கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
அரிசி - 400 கிராம் (1 1/2 கப்) - புழுங்கல் அரிசி, நைசான அரிசி துவரம் பருப்பு - 200 கிராம் (3/4 கப்) தண்ணீர் - 1 1/2 லிட்டர் சின்ன வெங்காயம் - 100 கிராம் காய்ந்த மிளகாய் - 4 கருவேப்பிலை உருளைக்கிழங்கு - 1 சின்னது சௌ சௌ - பாதி காய் கேரட் - 50 கிராம் பீன்ஸ் - 5 முருங்கைக்காய் - 1 கத்திரிக்காய் - 2 சின்னது பட்டர் பீன்ஸ் - 100 கிராம் தக்காளி - 2 மீடியம் சைஸ் புளி - சின்ன நெல்லிக்காய் அளவு தனி மிளகாய தூள் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மல்லித்தூள் - 1 டீஸ்பூன் சாம்பார் பொடி - 3 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் - 1/4 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு கொத்தமல்லி
செய்முறை:
Advertisment
Advertisements
அரிசியையும் பருப்பையும் கழுவி 20 நிமிஷம் ஊற வைக்கவும். குக்கர்ல தண்ணி கொதிச்சதும் அரிசி பருப்பை சேர்த்து நல்லா குழைவா வேக வைக்கவும். ஒரு பாத்திரத்துல எண்ணெய் ஊத்தி வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். உருளைக்கிழங்கு, சௌ சௌ, கேரட், பீன்ஸ், முருங்கைக்காய், கத்திரிக்காய், பட்டர் பீன்ஸ் சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும்.
புளியை கரைத்து வடிகட்டி, மிளகாய தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், சீரகத்தூள் சேர்த்து கரைக்கவும். காய்கறி வதங்கியதும் புளி கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அரிசி பருப்பு வெந்ததும், காய்கறி கலவையோட சேர்த்து நல்லா கலந்து கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.