தேங்காய் பால் சாதம் லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற ஒரு சுவையான மற்றும் எளிதில் தயாரிக்கக்கூடிய உணவு என்றும், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் என்பதால் லஞ்ச் பாக்ஸ் காலியாகத் திரும்பி வரும். தேங்காய் பால் சேர்ப்பதால் இந்த சாதம் ஒரு தனித்துவமான சுவையுடன் இருக்கும். அவ்வளவு சுவையான தேங்காய் பால் சாதம் எப்படி சென்னை ஃபுட்கோர்ட் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப் தேங்காய் - 1 பட்டை - 2 கிராம்பு - 3 ஏலக்காய் - 1 பிரிஞ்சி இலைகள் - 2 நறுக்கிய வெங்காயம் - 3 நறுக்கிய பச்சை மிளகாய் - 5 நசுக்கிய இஞ்சி பூண்டு விழுது பச்சை பட்டாணி - 2 கைப்பிடி எண்ணெய் - 4 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
Advertisment
Advertisements
2 கப் பாசுமதி அரிசியை நன்கு கழுவி, அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். இது அரிசி நன்கு வெந்து, உதிரியாக வர உதவும். ஒரு மிக்ஸர் ஜாரில் ஒரு தேங்காயை உடைத்து சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டி, கெட்டியான 3 கப் தேங்காய் பாலை எடுத்து வைக்கவும்.
ஒரு பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து, 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மற்றும் பிரிஞ்சி இலைகளைச் சேர்த்து வதக்கவும். நறுக்கிய 3 வெங்காயம் மற்றும் 5 பச்சை மிளகாயைச் சேர்த்து, வெங்காயம் மென்மையாகும் வரை நன்கு வதக்கவும்.
வதங்கியதும், நசுக்கிய இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். இப்போது, எடுத்து வைத்துள்ள 3 கப் தேங்காய் பாலை குக்கரில் ஊற்றவும். சுவைக்கு ஏற்ப 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
ஊறவைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி, குக்கரில் உள்ள தேங்காய் பால் கலவையுடன் சேர்க்கவும். மெதுவாகக் கிளறி விடவும், அரிசி உடையாமல் பார்த்துக் கொள்ளவும். இறுதியாக, 2 கைப்பிடி பச்சை பட்டாணியையும் சேர்க்கவும்.
குக்கரை மூடி, 2 விசில் வரும் வரை வேக விடவும். 2 விசில் சத்தத்திற்குப் பிறகு, அடுப்பை அணைத்து, குக்கரில் உள்ள ஆவி முழுமையாக அடங்கியதும் மூடியைத் திறக்கவும். அவ்வளவுதான். சுவையான மற்றும் மணமான தேங்காய் பால் சாதம் தயார். இதை அப்படியே லஞ்ச் பாக்ஸில் அடைத்து கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பிச் சாப்பிட்டு, லஞ்ச் பாக்ஸ் காலியாகத்தான் வீடு திரும்பும்.