குக்கரில் எலுமிச்சை சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். வேலைக்குச் செல்வோருக்கும், பேச்சுலர்களுக்கும், நேரமில்லாதவர்களுக்கும் இது மிகவும் எளிதான முறையாகும். சாதம் வடித்து காயவைக்கும் தொல்லை இல்லாமல், குக்கரில் நேரடியாகத் தயாரிக்கும் முறையை நித்ரா கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
அரிசி - 2 டம்ளர் நல்லெண்ணெய் உப்பு - தேவையான அளவு கடுகு - 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை எலுமிச்சை - 2 பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை பச்சை மிளகாய் - 2 கேரட் - 1 கருவேப்பிலை - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 5 இஞ்சி - 1 சிறிய துண்டு
செய்முறை
Advertisment
Advertisements
அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். காய்ந்த மிளகாய், கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் கடலைப்பருப்பு சேர்க்கவும். பருப்பு சிவந்ததும், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும். எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் சேர்க்கவும். (இங்கு 2 டம்ளர் அரிசிக்கு 4 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்)
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், ஊறவைத்த அரிசியை சேர்க்கவும். உப்பு சரிபார்த்து குக்கரை மூடவும். குக்கரை மிதமான தீயில் வைக்கவும். ஒரு விசில் வந்ததும் 10-15 நிமிடம் கழித்து குக்கரை திறக்கவும். நறுக்கிய கேரட் மற்றும் வேர்க்கடலை சேர்த்து நன்றாக கலக்கவும். சுவையான எலுமிச்சை சாதம் தயார். இந்த சாதம் பார்க்கவும் சாப்பிடவும் மிகவும் நன்றாக இருக்கும்.