New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/26/g1rue8DRg991QcKIFt0T.jpg)
நுரையீரல் பிரச்சனை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர் சந்தோஷிமா கார்த்திக் கூறுவது பற்றி பார்ப்போம்.
காற்று மாசு மற்றும் இன்றி பல்வேறு வகைகளில் மனித உடலில் நுரையீரல் பாதிப்படைகிறது. ஆனால் அவற்றை ஆரோக்கியமாக பாதுகாக்கும் மூன்று வழிகள் பற்றி மருத்துவர் சந்தோஷமா கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
1. இஞ்சி - இஞ்சி சாறு எடுத்து ஒரு 20 நிமிடம் வைத்து விட்டால் அதில் தெளிந்த நீர் கிடைக்கும். அந்த நீரை எடுத்து தேன் கலந்து தினமும் சாப்பிடலாம்.
2. கடுக்காய் - கடுக்காய் பொடியாக வாங்கி அதை ஒரு ஸ்பூன் எடுத்து தேனில் கலந்து தினமும் இரவு சாப்பிட்டு வரலாம்.
3. கரிசலாங்கண்ணி - கரிசலாங்கண்ணி பொடி வாங்கி கொள்ளவும். ஒரு ஸ்பூன் பொடி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து கசாயம் மாதிரி தினமும் குடிக்கலாம்.
இதனை செய்வதன் மூலம் நுரையீரலில் இருக்கும் கபம் வெளியாகி நுரையீரல் நன்றாக செயல்படும் என மருத்துவர் சந்தோஷமா கார்த்திகேயன் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.