மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் கம கம கிராமத்து மீன் குழம்பு செய்வது ரொம்ப ஈஸி. இங்கே பாருங்க.
Advertisment
தக்காளி புளி கரைசல் மீன் கடுகு, சீரகம் வெந்தயம் வரமிளகாய் பச்சை மிளகாய் கறிவேப்பிலை இஞ்சி, பூண்டு மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் சின்ன வெங்காயம் கல் உப்பு
முதலில் பாத்திரம் எடுத்து அதில் தக்காளியை போட்டு கைகளால் பிசைய வேண்டும். இடையில் பெரிய நெல்லி அளவு புளி எடுத்து தண்ணீர் சேர்த்து புளி கரைச்சல் ரெடி பண்ணி வைக்க வேண்டும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணை ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டை 1-2டாக இடித்து வாசனை வரும் வரை செய்து சேர்க்கவும்.
Advertisment
Advertisement
அடுத்தாக அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், 10-12 சின்ன வெங்காயம், கல் உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதக்கவும். இப்போது தக்காளி, புளி தண்ணீர் கரைச்சலை சேர்க்கவும். குறைந்த தீயில் வைத்து பச்சை வாசனை போக வதக்வும்.
1 கொதி வந்ததும் கழுவி வைத்த மீனை போடவும். இப்போது அனைத்தையும் நன்கு வேக வைக்கவும். மீன் வெந்து குழம்பு கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவு தான் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல் கிராமத்து மீன் குழம்பு ரெடி. சுடு சோற்றுடன் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news