மாதம்பட்டி ரங்கராஜ் கல்யாண விருந்தில் பதநீர் இட்லி வழங்கப்படுகிறது அதன் ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
பச்சை அரிசி 1 ½ கப்
வேக வைத்த அரிசி அரை கப்
உளுந்து ¼ கப்
வெந்தம் 1 ஸ்பூன்
உப்பு
பதநீர் 200 கிராம்
துருவிய தேங்காய் அரை கப்
ஏலக்காய் 3
முந்திரி பருப்பு 15
எண்ணெய்
தண்ணீர் 2 கப்
செய்முறை: பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தம் தண்ணீர் சேர்த்து 8 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து இதை அரைத்துகொள்ள வேண்டும். 8 மணி நேரம் இந்த மாவை புளிக்க வைக்க வேண்டும். இட்லி செய்வதற்கு முன்பாக பதநீர், தேங்காய், ஏலக்காய் பொடி, முந்திரி ஆகியவற்றை மாவில் சேர்க்கவும். தொடர்ந்து வழக்கம் போல் இட்லியை ஊற்ற வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“