விஜய் டிவி மகாநதி சீரியல் ஸ்டைல் சுழியம் ரெசிபி... இப்படி செய்து குடுங்க; இன்னும் இருக்கான்னு கேட்பாங்க!

மகாநதி சீரியலில் விஜய் காவேரிக்கு செய்து கொடுத்தது போல சுழியம் வீட்டில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

மகாநதி சீரியலில் விஜய் காவேரிக்கு செய்து கொடுத்தது போல சுழியம் வீட்டில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
சுழியம்

சுழியம், தென்னிந்தியாவில் குறிப்பாக பண்டிகை காலங்களில் மிகவும் விருப்பமாக உண்ணப்படும் ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும். இதன் எளிமையான செய்முறையும், தனித்துவமான சுவையும் அனைவரையும் கவர்ந்திழுக்கும். சில நாட்களுக்கு முன்பு கூட மகாநதி சீரியலில் நடிக்கும் விஜய் கதாப்பாத்திரம் தனது மனைவிக்கும் சுழியம் செய்து கொடுத்து இருப்பார். அதை எப்படி செய்வது என்று ரோம்வித்பைட்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு - 1 கப்
வெல்லம் - 1 கப் (உங்கள் இனிப்புக்கு ஏற்ப கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்)
துருவிய தேங்காய் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
மைதா மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை (விரும்பினால்)
உப்பு - ஒரு சிட்டிகை
பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

Advertisment
Advertisements

முதலில் கடலை பருப்பை நன்றாகக் கழுவி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் அல்லது பாத்திரத்தில் நன்கு வேக வைக்கவும். பருப்பு நன்றாக மசிந்து வரும் பதத்தில் வெந்திருக்க வேண்டும். 

வெந்த கடலை பருப்பை நன்றாக மசித்துக்கொள்ளவும். அதனுடன் வெல்லம், துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும். வெல்லம் முழுவதுமாக கரைந்து, கலவை ஒன்று சேரும் வரை கிளறவும். இந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும். இதுவே சுழியத்திற்கான பூரணம்.

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள் (விரும்பினால்) மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும். மாவு ரொம்பவும் நீர்க்கமாகவோ அல்லது கெட்டியாகவோ இருக்கக்கூடாது.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து, பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும், ஒவ்வொரு பூரண உருண்டையையும் மைதா மாவு கரைசலில் நன்றாக நனைத்து எடுக்கவும். பூரணம் முழுவதுமாக மாவில் மூழ்கியிருக்க வேண்டும்.
மாவில் நனைத்த பூரண உருண்டைகளை சூடான எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக மாறும் வரை பொரிக்கவும். 

ஒரு பக்கம் வெந்ததும், மறுபக்கம் திருப்பிவிட்டு வேக விடவும். சுழியம் பொன்னிறமாக வந்ததும் எண்ணெயில் இருந்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். சுவையான, சூடான சுழியம் இப்போது பரிமாறத் தயார். 

 

Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: