தீபாவளி பண்டிகையில் இனிப்பு முக்கிய பங்கு வகிக்கும். அனைவரது வீடுகளிலும் விதவிதமான இனிப்பு வகைகள் செய்து பகிர்ந்தளிப்பர். புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். வீட்டிலேயே இனிப்பு சமைத்து கொடுப்பது ஆரோக்கியமும், மகிழ்ச்சியையும் கொடுக்கும். அந்த வகையில் அதிக வேலையில்லாமல் 10 10 நிமிடத்தில் தீபாவளி குலோப் ஜாமுன் செய்யலாம். புதுவிதமாக இட்லி மாவில் குலோப் ஜாமுன் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- இட்லி மாவு - 1 கப்
- ரவை - 2 ஸ்பூன்
- கேரட் - 1
- சர்க்கரை - 1 கப்
செய்முறை
முன்னதாக, இட்லி மாவு எடுக்கும் போது, மாவு புளிக்க கூடாது. புளிக்காத ஃபிரஸ் மாவாக இருக்க வேண்டும்.
முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு சேர்த்து, ரவை போடவும். அடுத்து 1 கேரட் மிக்ஸியில் அரைத்து எடுத்து இதில் சேர்க்கவும். கேரட் சேர்த்து நன்கு கலக்கவும். கேரட் சேர்ப்பது ஆரோக்கியமானதாக இருக்கம். தட்டம் வைத்து மூடி 5 நிமிடம் ஊற வைக்கவும்.
அடுத்து ஜீரா தயாரிக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் 1 கப் சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். மாவு எடுத்த கப் அளவு சர்க்கரை சேர்க்க வேண்டும். 1 கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும். அடுப்பில் வைத்து நன்கு கிளறி வேண்டும். ஜீரா தயார். அதில் 1/4 ஸ்பூன் ஏலக்காய் சேர்க்க வேண்டும்.
அவ்வளவு தான், இப்போது, இட்லி மாவு கலவை போண்டா மாவு பதத்திற்கு வந்து இருக்கும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இட்லி மாவை சிறு உருண்டையாக போட வேண்டும். மீடியம் பிளோமில் வைத்து போட்டு எடுக்க வேண்டும். பொன்னிறமாக வேக விட்டு எடுக்கலாம். உருண்டைகளை எடுத்தப்பின், சுடாக இருக்கும் போது ஜீராவில் போட்டு விடலாம். 1 மணி நேரம் கழித்து எடுத்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“