கிணற்றில் இருக்கும் மலைப்பாம்பை பிடிப்பதற்கு முயற்சி செய்த நபரை, மலைப்பாம்பு அவரை இறுக்கமாக பிடித்ததால் அவர் உயிழிந்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவி பட்டினம் அருகே உள்ள கல்லுகுட்டாபட்டியில், விவசாயிகளின் ஆடுகளை மலைப்பாம்பு விழுங்கியுள்ளது. இந்நிலையில் இது விவசாயிகள் நீர் எடுக்கும் கிணற்றில் தஞ்சம் அடைந்துள்ளது. இந்த தகவலை வனத்துறையினருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வர நேரம் ஆனதால், பக்கத்து கிராமத்தில் உள்ள பாம்பு பிடிப்பதில் அனுபவம் கொண்ட நடராஜனை மலைப் பாம்பை பிடிக்க அழைத்து வந்துள்ளனர்.
அவரும் கிணற்றில் இறங்கி பாம்பை பிடித்துள்ளார். அவர் பாம்புடன் மேலே ஏறினார். ஆனால் திடீரென்று பாம்பு அவரை இறுக்கமாக சுற்றிக்கொண்டது, அவரால் பாம்பின் பிடியிலிருந்து தன்னை மீட்க முடியவில்லை. மேலும் அவருடன் பாம்பு மீண்டும் கிணற்றுக்குள் விழுந்தது. தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் வரை மீட்க போராடினர். ஆனால் அவர் சடலமாக மீட்கபட்டார். இது பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.