ஒவ்வொரு வட்டாரத்திலும் சில உணவுகள் சிறப்பாக இருக்கும், அதனால்தான் அந்த உணவுடன் அந்த ஊரின் பெயரும் சேர்த்து குறிப்பிடப்படுகிறது. அப்படி ஊர் பெயருடன் சேர்த்து குறிப்பிடப்படும் உண்வுகளும் நன்றாக பிரபலமடைகின்றன.
பொதுவாக சாம்பார் என்றால் அதில் மிளாய்தூள், மல்லித்தூள் போடுவது வழக்கமாக இருக்கும். ஆனால், இப்படி மிளகாய்தூள், மல்லித்தூள் எந்த ஒரு தூளையும் போடாமல் மணக்க மணக்க ஒரு சாம்பார் வைக்க முடியும் என்றால் அதுதான் மன்னார்குடி வெள்ளை சாம்பார். ஆமாம், எந்த பொடியும் இல்லாமல் மணக்க மணக்க எப்படி வெள்ளை சாம்பார் வைப்பது என்று பார்ப்போம்.
மன்னார்குடி வெள்ளை சாம்பார் செய்முறை
முதலில் 2 கப் அளவு துவரம்பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள், 2-3 முறை நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள். அதை ஒரு குக்கரில் போடுங்கள். 2 வெங்காயங்களை கொஞ்சம் பெரிய அளவில் நறுக்கி போடுங்கள், அதே போல, 2 தக்காளிகளை பெரிய அளவில் நறுக்கி போடுங்கள், 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். இதனுடன் 1 டீஸ்பூன் அளவு சமையல் எண்ணெய் சேர்த்து கலந்து விடுங்கள். இப்போது குக்கரை மூடி வைத்து 3 விசில் வரும் வரை வேக வையுங்கள்.
இதை அடுத்து, ஒரு எலுமிச்சை பழம் அளவு புலி எடுத்து முக்கால் கப் அளவு தணீரில் ஊறவையுங்கள். அடுத்ததாக, நீங்கள் சாம்பாருக்கு வழக்கமாக என்ன காய்களைப் போடுவீர்களோ அதை நறுக்கி வைத்துக்கொள்ளூங்கள். முறுங்கைக்காய் 1, அவரைக்காய் 100 கிராம், பீன்ஸ் 50 கிராம், கேர்ட் 100 கிராம் நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, கடாயில் 2 டீஸ்ஸ்பூன் எண்ணெய் விட்டு, 6 பச்சை மிளகாயை நடுவில் கீறிவிட்டு மிதமாக வதக்கி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து அதே கடாயில், மீதமுள்ள எண்ணெயில் நறுக்கி் வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, மிதமான தீயில் காய்கறிகளின் நிறம் மாறாத அளவுக்கு காய்களை வதக்கிக்கொள்ளுங்கள்.
அடுத்து வேக வைத்த பருப்பை நன்றாக மசித்து விடுங்கள், இதை எடுத்து வதக்கி வைத்துள்ள காய்கறிகளில் சேர்த்துகொள்ளுங்கள். குக்கரை அலசி அரை கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளூங்கள், தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விடுங்கள். இதை மூடி வைத்துவிட்டு, மிதமான தீயில் 10 நிமிடம் வேக வையுங்கள்.
சாம்பாருக்கு காரம், மணம் கொடுக்க, கால் கப் அளவு தேங்காய் துருவி எடுத்துகொள்ளுங்கள், அதனுடன் வதக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், கால் டீஸ் பூன் அளவு சீரகம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது காய்கறிகள் வெந்த உடன், அதில், ஊற வைத்த புளியைக் கரைத்து ஊற்றுங்கள். அதற்கு பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் பச்சைமிளகாய் விழுதை சேர்க்க வேண்டும். ஒரு கால் கப் அளவு தண்ணீரை மிக்ஸி ஜாரில் ஊற்றி அலசி சேர்த்துக்கொள்ளுங்கள். தீயை அதிகமாக வைத்து சாம்பாரைக் கலக்கிவிடுங்கள். கொதிக்க ஆரம்பித்ததும் ஸ்டவ்வை நிறுத்திவிடுங்கள்.
இப்போது, இந்த சாம்பாரை சமையல் எண்ணெ, எண்ணெய், கடுகு சீரகம், வரமிளகாய், கருவேப்பிலையைப் போட்டு தாளித்துவிடுங்கள் அவ்வளவுதான் எந்த தூளும் இல்லாத மணமணக்கும் மன்னார்குடி வெள்ள சாம்பார் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.