மாப்பிளை சம்பா நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்நிலையில் இதில் தோசை எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
1 கப் சீரக சம்பா
1 கப் வரகு அரிசி
அரை கப் உளுந்தம் பருப்பு
1 டீஸ்பூன் வெந்தயம்
1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
செய்முறை “:சீரக சம்பா, வரகு அரிசி, வெந்தயம், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை நன்றாக 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து அதை நன்றாக அரைத்தெடுங்கள். பின்பு 6 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து இந்த மாவில் தண்ணீர் சேர்த்து தோசை போடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“