மரவள்ளிக்கிழங்கு வைத்து இந்த தோசையை ஈசியா வீட்டில் செய்து பாருங்க. ரொம்ப சுவையா தோசை இருக்கும்.
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – ஒரு கப்
மரவள்ளிக்கிழங்கு
காய்ந்த மிளகாய்
சீரகம்
பெருங்காயம்
உப்பு
எண்ணெய்
செய்முறை: மரவள்ளிக்கிழங்குகளை நன்றாக துண்டுகளாக நறுக்க வேண்டும் .தொடர்ந்து அதன் பால் போகும் அளவுக்கு கழுவ வேண்டும். புழுங்கல் அரிசிரியை 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம் ஆகியவற்றை கிழங்கோடு சேர்த்து அரைக்க வேண்டும். தொடர்ந்து அரிசியையும் சேர்த்து அரைக்க வேண்டும். இந்நிலையில் வேண்டும் என்றால் இந்த மாவை சில மணி நேரங்கள் புளிக்க வைத்து தோசை ஊற்றலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“