பிரியாணிக்கு அரிசி ரொம்ப முக்கியம். அதை பார்த்து வாங்க வேண்டும். பழைய அரிசி வாங்குவது பிரியாணிக்கு சுவையாக இருக்கும். கல்யாண வீட்டு ஸ்டைல் சிக்கன் பிரியாணி செய்வது பற்றி பார்ப்போம்.
Advertisment
எண்ணெய் நெய் பட்டை, ஏலக்காய், கிராம்பு வெங்காயம் இஞ்சி, பூண்டு பேஸ்ட் தக்காளி பச்சை மிளகாய் கொத்தமல்லி
செய்முறை
முதலில் பிரியாணி அரிசியை 40-1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதன் பின் பாத்திரம் வைத்து எண்ணெய், நெய், பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வெங்காயம் பொன்றிறம் ஆகும் வரை வதக்கவும். அதன் பின் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், தயிர், தக்காளி சேர்த்து இப்போது நன்கு வதக்கவும். பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை செய்யவும்.
Advertisment
Advertisement
இதில் கலர் பவுடர் எதுவும் சேர்ப்பது இல்லை. 2 பொருட்கள் வைத்து பிரியாணி மசாலா தயார் செய்யலாம். அதை கலந்து விடும். பச்சை வாசனை போட உடன் பேஸ்ட் பதத்திற்கு வரும். அதன் பின் மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கிய பின் சுத்தம் செய்து வைத்த சிக்கன் சேர்க்கவும். கொஞ்சம் மஞ்சள் தூள் மட்டும் சேர்க்க வேண்டும். அதன் பின் 700 மி.லி தண்ணீர் ஊற்றி கலக்கவும்.
இப்போது, அரிசி வடிக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இதில் ஊற வைத்த அரியை சேர்க்கவும். உப்பு கொஞ்சம் சேர்க்கவும். பாஸ்மதி அரிசி என்பதால் குறைவாக தண்ணீர் கொதித்தால் போதும். 50 சதவீதம் போதும். இதன் பின் தண்ணீர் வடித்து எடுக்கவும். இப்போது, சிக்கன் உள்ள பாத்திரத்தில் பால் சேர்க்கவும் அதன்பின் அரிசியையும் சேர்த்து விடவும். அரை எழுமிச்சை பிழிந்து விடவும்.
இப்போது கொதி வந்ததும் பாத்திரத்தை தட்டு வைத்து மூடவும். 20 நிமிடம் தம் போட்டு எடுத்தால் சுவையான சிக்கன் பிரியாணி ரெடி.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news