சர்க்கரை நோய்/ நீரிழிவு நோய் என்பது தற்போது ஒரு சாதாரண குறைபாடாகிவிட்டது. வீட்டில் இருக்கும் 35 வயதை கடந்த அனைவருமே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோயால் பாதிக்கப்படாதவர்களின் எண்ணிக்கை குறைவுதான். இந்தியா சர்க்கரை நோயாளிகள் அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஒரு காலத்தில் பணக்காரர்களின் நோய் என்று கூறப்பட்ட இந்த நோய் தற்போது அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது.
பெற்றோர் இருவருக்குமே சர்க்கரை நோய் ஏற்பட்டால், அவர்களது குழந்தைகளும் நிச்சியம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உடல் பயிற்சியின்மை, சோர்வான வாழ்கை, துரித உணவுகள், தூக்கம் இன்மை இப்படி பல விஷயங்களால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. ஒரு முறை நீங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டால், குணமடைவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை. வாழ்நாள் முழுவதும் இந்த குறைபாடுடன்தான் இருக்க முடியும்.
இதனால் ரத்தத்தில் சக்கரை நோய்யை கட்டுப்படுத்த சில மாற்றங்களை நாம் செய்ய வேண்டும். காய்கறி, பழங்கள் முக்கியம் என்றாலும், சில மசாலா பொருட்களும் முக்கியத்துவம் பெறுகிறது. கொத்தமல்லியின் முழு விதைகளை இரவில் ஊறவைத்து, காலையில் அந்த நீரை குடித்தால் சக்கரை அளவு கட்டுப்படுத்த முடியும்.
மேலும் நீங்கள் மாசா அறைக்கும்போது, அதிக மல்லியை சேர்த்துகொள்ளுங்கள். இடித்த மல்லி ரசம், புலால் சமைக்கும்பொது அதிலும் அதிக மல்லி சேர்த்து சமைக்கலாம். இப்படி மல்லியை பல வடிவங்களில் நாம் சேர்த்துகொள்ள வேண்டும்.