நாள் பட்ட கை, கால் வீக்கம்... இந்த செடியின் விதையை இப்படி சாப்பிட்டு பாருங்க; செம்ம ரிசல்ட் இருக்கு!
நீர் முள்ளி மூலிகையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், நீர் முள்ளியின் பயன்கள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் விளக்கமாக பார்க்கலாம்.
நீர் முள்ளி மூலிகையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், நீர் முள்ளியின் பயன்கள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் விளக்கமாக பார்க்கலாம்.
நீர் முள்ளி என்ற தாவரம் பெரும்பாலும் வாய்க்கால், குளம் போன்ற நீர் நிலைகளில் அதிகப்படியாக காணப்படும். பார்ப்பதற்கு மிக சாதாரணமாக இருக்கும் இந்தச் செடியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. இவை நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்வதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இது குறித்த தகவல்கள் அனைத்தும் நியூஸ்7 யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisment
குறிப்பாக, இதன் விதைகள், இலைகள், பூக்கள் என அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது. முக்கியமாக, குழந்தைப் பெற்ற பெண்களுக்கு நீர் முள்ளி இலைகளை மிளகுடன் சேர்த்து அரைத்து கொடுக்கும் போது, அவர்களின் வயிறு முற்றிலும் சுத்தமாகும் என்று கூறுகின்றனர்.
இதேபோல், செரிமானம் தொடர்பான பிரச்சனைகளையும் நீர்முள்ளி குணப்படுத்துகிறது. நீர்க்கட்டுகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் நீர் முள்ளிக்கு இருக்கிறது. மேலும், வாத நீரால் ஏற்படும் கை, கால் வீக்கம் போன்றவற்றையும் இவை சரி செய்கின்றன.
சிறுநீரக பாதையில் ஏற்படும் தொற்றுகளையும் இவை குணப்படுத்துகின்றன. இதனை கசாயம் எடுத்து சீரகம், மிளகுடன் சேர்த்து குடிக்கலாம். இது தவிர நீர் முள்ளி விதைகளை அரைத்து பொடியாக்கி திரிபலா பொடியுடன் சேர்த்து மருந்தாக உபயோகிக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisment
Advertisements
இவ்வளவு மருத்துவ குணங்கள் இதில் இருப்பதால், நம்முடைய தேவையை சரியாக உணர்ந்து இவற்றை மருந்தாக எடுத்துக் கொள்ளும் போது, நமக்கு முழு பலன் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.