சுகர், பி.பி-யை குறைக்கும்... நரம்பையும் உறுதியாக்கும்; இது கிடைச்சா விடாதீங்க: சொல்லும் டாக்டர் கார்த்திகேயன்
நூல்கோலில் இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். அதன் பயன்கள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
நூல்கோலில் இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். அதன் பயன்கள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு காய்கறியிலும் பல்வேறு விதமான ஊட்டச்சத்துகள் உள்ளன. அதன்படி, நூல்கோலில் இருக்கும் மருத்துவ குணங்கள் தொடர்பாக தனது யூடியூப் சேனலில் மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Advertisment
அந்த வகையில், கசப்பான பாகற்காய் சாறு, பூசணி சாறு மற்றும் நூல்கோல் சாறு ஆகியவற்றின் விளைவுகளை ஒப்பிட்டு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில், பாகற்காய் சாறு மற்றும் நூல்கோல் சாறு இரண்டுமே இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது கண்டறியப்பட்டது. எனவே, நூல்கோல் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த உணவு என்று கார்த்திகேயன் கூறுகிறார்.
நூல்கோல், காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் உள்ள சில காய்கறிகள் தைராய்டு அளவை பாதிக்கக்கூடும் என்றாலும், நூல்கோல் தைராய்டு செயல்பாட்டில் நடுநிலையான விளைவைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும், தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரை அணுகுவது நல்லது என கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார்.
நூல்கோலில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன மற்றும் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
நூல்கோலில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு இது மிகவும் நல்லது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக நார்ச்சத்து மற்றும் பசியைக் கட்டுப்படுத்தும் திறன் காரணமாக, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு நூல்கோல் ஒரு சிறந்த தேர்வு. இதை காய்கறியாகவோ அல்லது சாறாகவோ உட்கொள்ளலாம்.
மேலும், நூல்கோலில் வைட்டமின்கள் ஏ, சி, மாங்கனீஸ் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சத்துகளும் உள்ளன. இதன் இலைகளும் உண்ணக்கூடியவை. அவை ஃபோலேட் சத்துகளைக் கொண்டுள்ளன. இது கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கிறது. எனவே, நோய்களைத் தடுக்க, குறிப்பாக பருவகால மாற்றங்களின் போது நூல்கோலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.