மிகைய உணர்வுடன் கூடிய நரம்பியல் குழப்பம் (Hypersensitive Nerve Disorder) எனப்படும் மைகிரேன் (Migraine) என்பது பெரும்பாலும் பெண்களிடம் காணப்படும் ஒரு நிலையான தலைவலி. உலக மக்கள்தொகையில் சுமார் 15% பேர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். சிறப்பாக 30 முதல் 45 வயதுக்குள் உள்ள பெண்களுக்கு, வாரத்திற்கு ஒருமுறை அல்லது அதற்கும் மேலாக ஒற்றைத்தலைவலி ஏற்படும் நிலை இதுவாகும் என டாக்டர் ஜெயரூபா ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான காரணங்களாக அதிக வெப்பம், சூரிய ஒளி, தூக்கமின்மை அல்லது முறையற்ற தூக்கம், மன அழுத்தம், உடல் வெப்பம், அதிக வாசனை கொண்ட பொருட்கள், காரமான அல்லது பொரித்த உணவுகள், அதிர்ச்சி தரும் ஒலி, ஒளி மற்றும் குடலில் செரோட்டோனின் சமநிலையின்மை ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. மைகிரேன் குறைக்க ஒரு இயற்கையான மூலிகை டீ எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி விதை – 1 மேசைக்கரண்டி
சீரகம் – ½ மேசைக்கரண்டி
சோம்பு – ½ மேசைக்கரண்டி
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
எலுமிச்சை சாறு – ½ பழம்
நீர் – 150 மில்லி
Advertisment
Advertisements
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 150 மில்லி நீரை கொதிக்க வைக்கவும். இஞ்சி நன்றாக மசித்து விடவும். கொத்தமல்லி விதை, சீரகம், சோம்பு, இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அடுப்பை அணைத்த பிறகு, எலுமிச்சை சாறு சேர்க்கவும். நன்கு வடிகட்டி வெதுவெதுப்பாக குடிக்கலாம்.
குறிப்பாக இந்த டீயை மாதவிடாய் நேரத்திற்கு முன் அல்லது பிறகு குடிக்கலாம். அதிக வெப்பத்திற்கு உட்பட்ட பிறகு, செரிமானக் கோளாறுகள் ஏற்படும் போது, வாரத்தில் 2 முதல் 3 முறை வரை பருகலாம்.
மேலும் ஒற்றைத்தலைவலியை சரிசெய்ய தினசரி மெடிடேஷன், பிராணாயாமா, யோகா செய்யலாம். மசாலா உணவுகள், எண்ணெய், பாலை சார்ந்த உணவுகள் தவிர்க்கவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.