/tamil-ie/media/media_files/uploads/2022/08/milk-being-poured.jpg)
சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுக் கட்டுபாடு மற்றும் உடல் பயிற்சியின் முக்கியத்துவத்தை பற்றி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கும். ஒட்டுமொத்தமாக ஒரு வாழ்க்கை முறை மாற்றத்திற்கு நீங்கள் தயாராக வேண்டும் என்பதால் இதற்கு நீங்கள் ஒரு முன் தயாரிப்பை வைத்திருக்க வேண்டும். இந்நிலையில் என்ன சாப்பிட வேண்டும் என்று யோசிக்கும் நீங்கள் என்ன குடிக்க வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும். இந்நிலையில் இந்த ஒரு விஷயத்தை நீங்கள் குடித்தால் நிச்சயம் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பசும் பால் குடிப்பதால் இது நிகழும் என்று மருத்துவர்கள் கூறுகின்றன. கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரோட்டின் ஆகியவை ஒன்றாக சேர பால் உதவுகிறது. பாலில் இருக்கும் புரத சத்து, சர்க்கரையை மெதுவாக ரத்தத்தில் கலக்க உதவுகிறது. மேலும் இதனால் சர்க்கரை அளவு ரத்தத்தில் திடீரென்று அதிகமாவதை தடுக்கிறது. மேலும் பசியை கட்டுபடுத்துகிறது. மேலும் இது உடலில் உள்ள எலக்ட்ரோலைட் சீராக வைக்க உதவுகிறது.
8 அவுன்ஸ் பாலில், 12 கிராம் கார்போஹைட்ரேட், 8 கிராம் உயர்தர புரோட்டின் இருக்கிறது. இது உங்களை பசியை கட்டுபடுத்தும், அதுவும் ரத்த சர்க்கரையை அதிகரிக்காமல் இதை செய்யும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.