/indian-express-tamil/media/media_files/2025/06/09/wpDcQH7kvQp3l05Cglle.jpg)
மிகவும் புரதம் நிறைந்த உணவுகளில் அடை தோசை முதன்மையானது. அந்த வகையில் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சாமை அரிசி அடை எவ்வாறு செய்ய வேண்டும் என்று தனது யூடியூப் சேனலில் செஃப் வெங்கடேஷ் பட் குறிப்பிட்டுள்ளார்.
தேவையான பொருட்கள்:
சாமை அரிசி,
உளுத்தம் பருப்பு,
துவரம் பருப்பு,
பயத்தம் பருப்பு,
சிறுபருப்பு,
காய்ந்த மிளகாய்கள்,
சீரகம்,
உப்பு,
மஞ்சள் தூள்,
பெருங்காயத்தூள்,
முட்டைகோஸ் மற்றும்
வெண்ணெய்.
செய்முறை:
முதலில் 100 கிராம் அளவிற்கு சாமை அரிசி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, சிறுபருப்பு, 10 காய்ந்த மிளகாய்கள், சிறிதளவு சீரகம் ஆகிய அனைத்தையும் சுமார் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இவை அனைத்தையும் கிரைண்டரில் கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுத்து வைத்திருக்க வேண்டும். இத்துடன் தேவையான அளவு உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் 200 கிராம் ஆகியவை சேர்த்து கலக்க வேண்டும்.
இப்போது, அடுப்பில் தோசைக் கல் வைத்து அதில் சிறிதளவு வெண்ணெய் தேய்க்க வேண்டும். இனி அடை மாவை தோசை வடிவத்தில் சுட்டு எடுத்தால் சுவையான சாமை அரிசி அடை தயாராகி விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.