சாதாரணமாக இல்லாமல் தினை மாவில் செய்வதால், இந்த அதிரம் உடலுக்கு ரொம்ப நல்லது.
தேவையான பொருட்கள்
தினை – 2 கப்
வெல்லம் – ¾ கப்
எண்ணெய்
நெய்
ஏலக்காய் – 3
செய்முறை: தினையை நன்றாக ஒரு முறை கழுவ வேண்டும். தொடர்ந்து அதில் புதிதாக தண்ணீர் சேர்த்து, ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து ஊறிய தினையை, நன்றாக காய வைக்க வேண்டும். தொடர்ந்து அதை சில ஏலக்காய் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். தொடர்ந்து வெல்லத்தை தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும். பாகு காய்ச்சும்போது, பாகின் சில துளிகளை ஒரு கப் தண்ணீரில் விட்டு பாருங்கள். தண்ணீரில் அந்த துளிகள் கரைந்தால், பாகு இன்னும் தயாராகவில்லை என்று அர்த்தம். தண்ணீரில் பாகின் துளிகள் கரையாமல் இருந்தால்தான் சரியான பதத்திற்கு வந்துள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் பாகு சரியான பதத்திற்கு வந்தவுடன் அரைத்த திணை மாவை சேர்த்து கிண்ட வேண்டும். 3 பகுதிகளாக பிரித்து, மாவை சேர்க்க வேண்டும். இந்நிலையில் மாவை ஒன்றாக கலந்த , ஒரு பாத்திரத்திற்கு அதை மாற்றுங்கள். தொடர்ந்து ஒரு சிறு தட்டில் நெய் தடவ வேண்டும், கையிலும் நெய் தடவி கொள்ளுங்கள் .தற்போது மாவை எடுத்து அதிரசம் தட்டி எண்ணெய்யில் பொறித்து எடுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“