காலை இது; நைட் அது... சுகர் இருக்கும் மக்களுக்கு ஸ்பெஷல் மெனு: சொல்லும் டாக்டர் சிவபிரகாஷ்

முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். இந்தப் பதிவில் காலை முதல் இரவு வரை என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் மருத்துவர் சிவபிரகாஷ்.

முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். இந்தப் பதிவில் காலை முதல் இரவு வரை என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் மருத்துவர் சிவபிரகாஷ்.

author-image
WebDesk
New Update
Diabetics foods

காலை இது; நைட் அது... சுகர் இருக்கும் மக்களுக்கு ஸ்பெஷல் மெனு: சொல்லும் டாக்டர் சிவபிரகாஷ்

நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும். இத்தகைய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைப்பது நம் உணவு முறையே. முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். இந்தப் பதிவில் காலை முதல் இரவு வரை என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் மருத்துவர் சிவபிரகாஷ்.

Advertisment

உடல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், இனிப்பு சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. குறிப்பாக, சப்போட்டா மற்றும் மாம்பழம சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நெல்லிக்காய், பப்பாளி உள்ளிட்ட பழங்களை சாப்பிடலாம்.

அதேபோல் மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. கிழங்குகள் சாப்பிட வேண்டும் என்றால், பனங்கிழங்கு மற்றும் முடவாட்டுக்கால் கிழங்கை சாப்பிடலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து அதற்கு தகுந்தார்போல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். 90% வீடுகளில் காலை உணவாக இட்லி அல்லது தோசை மட்டுமே உள்ளது. இதில் மாவுச்சத்து அதிகமாக இருப்பதால், எளிதில் ஜீரணம் ஆகிவிட்டாலும், சர்க்கரை அளவை அதிகரிக்கும் தன்மை கொண்டது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய காலை உணவு பற்றி மருத்துவர் சிவபிரகாஷ் விளக்கியுள்ளார்.

சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும் காலை உணவுகள்:

Advertisment
Advertisements

பொதுவாக காலை உணவு உடலில் சர்க்கரையின் அளவை அதிகமாக்காத உணவாக இருக்க வேண்டும். அந்த வகையில், சர்க்கரை நோயாளிகள் வாரத்திற்கு 2 நாட்கள் காலையில் இட்லி சாப்பிடலாம். அதனுடன் காய்கறிகள், சுண்டல் சேர்த்து சாப்பிட வேண்டும். இட்லியில், மாவுச்சத்து அதிகம் என்பதால், அதனை குறைக்க நார்சத்து உள்ள காறிகள் சேர்த்து சாப்பிட வேண்டும். இதனால், வயிறு நிறையும், சர்க்கரை அளவும் கூடாது என்கிறார் மருத்துவர் சிவபிரகாஷ்.

கோதுமை குருணையில் செய்யும் உணவு வகைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக நன்மை தரும். கோதுமை குருணையில் உப்புமா, பொங்கல், ஃப்ரைடு ரைஸ் உள்ளிட்ட பல உணவுகளை தயார் செய்யலாம். இதனை வாரத்திற்கு 2 நாட்கள் சாப்பிட வேண்டும். கோதுமை குருணை உடலின் சர்ககரை அளவை அதிகரிக்காது. வயிறு சாப்பிட்டது போன்ற உணர்வை கொடுக்கும். அதிகமாக சாப்பிட்ட உணர்வு இருக்காது. சிறுதானிய பொங்கல்: வரகு, சாமை, திணை, குதிரைவாலி இதில் ஏதாவது ஒன்றில் பருப்பு சேர்த்து பொங்கல் செய்து காலையில் சாப்பிடலாம். பருப்பு போட்டு அடை தோசை சாப்பிடலாம். இதனையும் வாரத்திற்கு 2 நாட்கள் சாப்பிடலாம் என்கிறார் மருத்துவர் சிவபிரகாஷ்.

காலை 11 மணியளவில் பசி எடுக்கும்போது சுண்டல் வகைகள்(வெள்ளை சுண்டல் தவிர), வெள்ளரி, பழ வகைகள் (மா, பலா, வாழை, சப்போட்டா) சாப்பிடலாம். மதிய உணவின்போது வெள்ள அரிசி சாப்பாட்டை தவிர்க்க வேண்டும். சிறுதானிய அரிசி, சிகப்பு அரிசியில் செய்து சாப்பிட வேண்டும். வெள்ள அரிசி சாப்பாட்டை தவிர்க்க முடியாதவர்கள், ஒரு கிண்ணம் வெள்ள அரிசி சாப்பிட்டால், அதனுடன் அதே அளவுக்கு காய்கறிகள் சாப்பிட வேண்டும் என்கிறார் மருத்துவர் சிவபிரகாஷ். 

காலையில் சாப்பிட்டதுபோல் இரவு உணவின்போதும், இட்லி, தோசைகளை தினமும் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். இரவில் அடை தோசை சாப்பிடுவது சிறந்தது. உப்மா, சப்பாத்தி, காய்கறிகளுடன் சாப்பிடலாம். இந்த மாதிரியான உணவு பழக்கங்களை அனைவரும் பழகி கொள்ள வேண்டும். இதனால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்கிறார் மருத்துவர் சிவபிரகாஷ்..

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: