/indian-express-tamil/media/media_files/2024/12/12/a2LwassSnTlT48xMXctG.jpg)
மூட்டுவலிக்கு முடக்கத்தான் கீரை - டாக்டர் சிவராமன்
மூட்டு வலி என்றாலே வயோதிகத்தில் ஏற்படுகிற எலும்புத் தேய்வினால் வருகிற மூட்டுவலியைக் கூறுவார்கள். அதுதான் அதிகம். ஆனால், இப்போது எல்லாம் 30-32 வயதிலேயே பலருக்கும் மூட்டு வலி வருகிறது. இந்த வயதில் மூட்டு வலி வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
உணவு முறை, வாழ்க்கை முறை ஆகியவற்றால் ஏற்படும் மூட்டுவலியைத் தவிர்க்க, உணவில் சேர்க்க வேண்டிய கீரை பற்றி மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
நம்முடைய உடலை முடக்கி வைக்கக்கூடிய மூட்டு வலியை அறுக்கக்கூடிய தன்மை இருப்பதனால்தான், முடக்கறுத்தான் கீரை என்று கூறுகிறார்கள். இந்த முடக்கறுத்தான் கீரையை அடை மாதிரி செய்து சாப்பிடலாம். தோசையில் செய்து சாப்பிடலாம். அப்படிப்பட்ட முடக்கத்தான் கீரையை வைத்து சூப் செய்வது பற்றி ஹேப்பி குக்கிங் அண்ட் கார்டன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
மிளகு
சீரகம்
பூண்டு
வெங்காயம்
தக்காளி
உப்பு
மஞ்சள் தூள்
முடக்கத்தான் கீரை
செய்முறை
மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை எடுத்து இடித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி சின்ன வெங்காயம், தக்காளி இடித்து வைத்துள்ள மிளகு சீரகம் மற்றும் முடக்கத்தான் கீரை, உப்பு, மஞ்சள் தூள் சிறிது போட்டு வேகவிட்டு எடுத்து குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.