கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
இப்படியாக ஒரு புது ஸ்நாக்ஸ் தான் முகலாயர் காலத்து ஃபேமஸ் மகாண்டி அல்வா ஆகும். இதனை எப்படி செய்வது என்று தில்லை சமையல் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
ரவை - அரை கப் பால் -2 கப் சர்க்கரை - ஒன்றரை கப் நெய் நட்ஸ் கிஸ்மிஸ்
செய்முறை
ஒரு அளவு கப் எடுத்து அதில் அரை கப் ரவை, இரண்டு கப் பால் சேர்த்து ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் கடாயில் நெய் சேர்த்து முந்திரி, பாதாம், கிஸ் மிஸ் போன்றவற்றை சேர்த்து வறுக்கவும்.
பின்னர் இவற்றை தனியாக எடுத்து வைக்கவும். அதே நெய்யில் சர்க்கரை ஒன்றரை கப் சேர்த்து கேரமல் மாதிரி செய்யவும். பின்னர் இதில் ஊற வைத்த ரவையை சேர்த்து கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் ஒன்று சேர்ந்து வரும் போது இறக்கிவிடலாம். மேலே சில நாட்ஸ்களைத் தூவி சாப்பிட ஆரம்பிக்கலாம் சுவையாக இருக்கும்.