ஒரு சொட்டு எண்ணெய் கூட இல்லாமல் சூப்பரான முருக்கு செய்ய முடியும். இதன் ரெசிபியை தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் அரிசி மாவு
அரை டீஸ்பூன் சீரகம்
அரை டீஸ்பூன் ஓமம்
பெருங்காயத்தூள்
ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள்
உப்பு
அரை கப் தயிர்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, சீரகம் , ஓமம், மிளகாய் பொடி, உப்பு, தயிர் ஆகியவற்றை சேர்க்கவும். இதை நன்றாக கலந்து முருக்கு பதத்திற்கு கொண்டு வாருங்கள். இடியாப்பம் குழலில் மாவை வைத்து கொள்ளுங்கள். வாழை இலை உள்ள தட்டில் முருக்கு போல் பிழியவும். தனி முருக்குகளாக பிழிந்து எடுக்கவும். பெரு பெரிய கடாயை எடுக்கவும். அதில் சிறிது ஸ்டாடு போல் ஒன்றை வைக்கவும். அதன் மேல் வாழை இலை கொண்ட தட்டை வைக்கவும். அதை மூடி போட்டு மூடவும். 15 நிமிஷத்துல முருக்கு மொறு மொறுப்பாக ரெடியாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“