/indian-express-tamil/media/media_files/2025/06/09/2ZDulklYEjxyR3ddcDQa.jpg)
சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் அன்றைய பொழுதே கழிந்ததாக இருக்காது. ஒரு நாளைக்கு நிறைய கப் காபி குடிப்பதாக பலரும் கூறிக் கேட்டிருப்போம். ஆனால், இவ்வாறு செய்வதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
எனினும், மருத்துவ குணம் நிறைந்த கடுகு காபி போட்டு குடிக்கலாம் என்று புஷ்பவனம் குப்புசாமி குறிப்பிட்டுள்ளார். இது குறித்த வீடியோ கலாட்டா தமிழ் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. அதன் குறிப்பை இப்பதிவில் பார்க்கலாம்.
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். இந்தக் கடுகு வெடித்து வரும் போது, அவற்றை வெளியே எடுத்து விடலாம். அதன் பின்னர், மிக்ஸியில் போட்டு காபி பொடி பதத்திற்கு அரைக்க வேண்டும்.
இந்தப் பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி தேவையான அளவு இனிப்பு சேர்த்து காபி தயாரிக்கலாம் என்று புஷ்பவனம் குப்புசாமி தெரிவித்துள்ளார். ஆனால், இதில் பால் சேர்க்காமல் குடிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடுகு காபியை குடிப்பதன் மூலம் சளி, இருமல் போன்ற தொல்லைகள் குணமடையும் என்று அவர் கூறுகிறார். மேலும், மூளை சுறுசுறுப்பாக இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.