எப்போதும் உளுந்த வடை, பருப்பு வடை சாப்பிட்டு போரடிக்கிறதா? இந்த வார விடுமுறையில் உங்கள் குடும்பத்தினரை மகிழ்விக்க சுவையான மட்டன் கீமா எப்படி செய்றதுனு பாருங்க..
தேவையான பொருட்கள்
மட்டன் கொத்துக்கறி - கால் கிலோ
பூண்டு - 10 பல்
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் – ¼ மூடி
பச்சை மிளகாய் - 3
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 3
பொறிகடலை - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
தக்காளி - 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு – சுவைக்கேற்ப
எப்படி செய்வது?
அடுப்பில் குக்கரை வைத்து அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கொத்துக்கறியைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி, தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் மேலே கொடுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் அதில் சேர்த்து நன்றாகக் கிளறிவிடவும்.
அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி, 2 அல்லது 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
ஃபிரஷ்ஷர் நீங்கியதும் குக்கரை திறக்கவும். கறியில் இன்னும் தண்ணீர் இருந்தால் வற்றும்வரை அதை அடுப்பிலேயே வைத்துக் கிளறவும். நன்கு ஆறியதும், மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இப்போது அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும், கொஞ்சமாக எண்ணெய் விடவும். அரைத்து வைத்த மட்டன் கறியை கொஞ்சமாக கையில் எடுத்து, வடைபோலத் தட்டி, இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுக்கவும். வடையின் மேற்புறம் பொன்னிறமாகும் வரை, ஒருசில நிமிடங்கள் மட்டும் தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் போதுமானது.
குறிப்பு: எண்ணெய்க்குப் பதில் நெய் சேர்த்தால், கூடுதல் சுவை மற்றும் வாசனையுடன் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“