கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
அதுவும் கோடையில் வெயில் தாக்கத்திற்கு தகுந்தார்போல செய்ய வேண்டும். அப்படி செய்வதற்கு ஏற்ப குளுகுளுன்னு நன்னாரி சர்பத் சிரப் எப்பைட் செய்வது என்று பார்ப்போம். ஒரு முறை செய்து வைத்தால் போதும் தேவைப்படும் போது எல்லாம் ஜூஸ் போட்டு குடிக்கலாம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்
நன்னாரி வேர் எலுமிச்சை சாறு சர்க்கரை பாதாம் பிசின் சப்ஜா விதை
செய்முறை
வெயில் காலம் வந்து விட்டது சில்லுனு குடிக்கிறதுக்கு நன்னாரி சர்பத் எப்படி செய்வது என்று பார்ப்போம். அதற்கு நன்னாரி வேர் வாங்கி நன்கு கழுவி இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின்னர் பாதாம் பிசினும் ஊற வைத்துக் கொள்ளவும். சப்ஜா விதைகளையும் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஊறவைத்த நன்னாரியை அரைத்து வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அதில் இந்த அரைத்து நன்னாரி வேரையும் சேர்த்து அரை லிட்டராகும் வரை வேக விடவும்.
அது ஒரு கடாயில் வெள்ளை சர்க்கரை சேர்த்து அதில் இந்த நன்னாரியையும் வடிகட்டி சேர்த்து கரைத்துக் கொள்ளவும் . கெட்டியாக வந்ததும் எலுமிச்சை பழம் சாறு சேர்த்து கலந்துவிட்டு ஆறவைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
இப்போது நன்னாரி ஜூஸ் செய்வது பற்றி பார்ப்போம். ஒரு கிளாஸில் பாதாம் பிசின் , சப்ஜா விதை, எலுமிச்சை சாறு, நன்னாரி சர்பத் சேர்த்து தண்ணீர் ஊற்றினால் அவ்வளவுதான் நன்னாரி சர்பத் ரெடியாகிவிடும்.