நார்த்தங்காயை உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும். மலச்சிக்கல், சிறுநீரகக் கல் நோய்களுக்கு மருந்தாகிறது. நார்த்தங்காயில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இதில் பச்சடி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
நறுக்கிய நார்த்தங்காய் – 1 கப்
வெல்லம் – ½ கப்
புளிக் கரைசல் – ½ கப்
பச்சை மிளகாய் – 4
காய்ந்த மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
தனியா – 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி தனியா, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து நார்த்தங்காயை போட்டு நன்கு வதக்கவும். பச்சை மிளகாயும் நறுக்கி வதக்கி, வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். அவ்வளவு தான் நார்த்தங்காய் பச்சடி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“