நவராத்திரி பூஜையான 9 நாட்களும், சிறப்பான உணவு செய்து நாம் அம்மனுக்கு படைப்போம். இது நம் மத வழிமுறைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் அம்மானுக்கு செபஷலாக ஜவ்வரிசி சுண்டல் செய்து கொடுங்கள்.
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி- 1 கப்
பாசிபருப்பு – ¼ கப்
தேங்காய் துருவல்- 3 டேபிள் ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- ½ ஸ்பூன்
கறிவேப்பில்லை- தேவையான அளவு
பச்சை மிளகாய்- 1
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
செய்முறை :
பாசி பருப்பை வெறுத்து, அதை தனியாக எடுத்து வைத்துகொள்ள வேண்டும். வறுத்த பருப்பை தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். அதிகமாக பருப்பு வேக கூடாது. மென்மையாக வரும் வரை மட்டுமே வேக வைக்க வேண்டும். தொடர்ந்து ஜவ்வரிசியை நீரில் போட்டு 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். தொடர்ந்து வாணலியை அடுப்பில் வைத்து தாளிப்பு தேவையான பொருட்களை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து ஜவ்வரிசி சேர்த்து வதக்க வேண்டும். பின்பு பாசிபருப்பு சேர்த்து வதக்கியதும் இறுதியாக தேங்காய் துவருவலை சேர்க்க வேண்டும்.