தேங்காய் பால், எள்ளுப்பால், கொள்ளுப்பால், கம்பு பால், சோயா பால், முந்திரி பால், பாதாம் பால் போன்ற தாவரப் பால்கள் இயற்கையான இனிப்புடன் (நாட்டுச்சக்கரை, வெல்லம்) சேர்த்து உட்கொள்ளும்போது அளப்பரிய சக்தியை உடலுக்கு அளிக்கின்றன.
Advertisment
குறிப்பாக முந்திரியை அப்படியே சாப்பிடுவதன் மூலம் அதன் முழுமையான சத்துக்களையும் பெறலாம். தேங்காயை நேரடியாக உட்கொள்வதன் மூலம் நரம்புகள் பலப்படும். தேங்காய் பாலை தயிராக மாற்றியும் பயன்படுத்தலாம். தாவர அடிப்படையிலான உணவுகள், எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை என்பதை மருத்துவர் தெளிவுபடுத்துகிறார்.
தேங்காய் இயற்கையாகவே பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகளைக் கொண்டுள்ளது. இந்த எலக்ட்ரோலைட்டுகள் திரவ சமநிலையைப் பராமரிக்கவும், தசை செயல்பாடு மற்றும் நரம்பு சமிக்ஞை செய்யவும் மிகவும் அவசியமானவை. நரம்பு மண்டலம் சரியாக செயல்பட இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உடல் திரவ நிலையில் உள்ள உணவுகளை எளிதாக ஏற்கும். பூமியில் நீர்ச்சத்து நிலப்பகுதியை விட அதிகமாக இருப்பது போல, நம் உடலிலும் நீர்ச்சத்து மிகுதியாக உள்ளது என்று பிஹன்வுட்ஸ்க்கு அளித்த பேட்டியில் சுக்கு காபி தாத்தா கூறியிருக்கிறார்.
Advertisment
Advertisements
மேலும் திரவ வடிவிலான உணவுகளை உட்கொள்ளும்போது, அதன் பலன்கள் பல மடங்கு அதிகரிக்கும். சாறு கனிகள் (சாறு நிறைந்த பழங்கள்) உடலுக்கு உயிர்ப்பான உணவாக (அல்கலைன் ஃபுட்) செயல்பட்டு, சக்தியை அழியாமல் பாதுகாக்கும்.
கடைகளில் விற்கப்படும் ஜூஸ்களை தவிர்த்து, பழங்களை நேரடியாக மென்று சாப்பிடுவது சிறந்தது. இருப்பினும், நாட்டுச்சக்கரை அல்லது கருப்பட்டி சேர்க்கப்பட்ட ஜூஸ்கள், வெள்ளை சர்க்கரை சேர்க்கப்பட்ட ஜூஸ்களை விட நன்மை பயக்கும். வெள்ளை சர்க்கரை "வைட்டமின் திருடன்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அது உடலில் உள்ள சத்துக்களை குறைக்கிறது.
ஆகவே, ஆரோக்கியமான வாழ்விற்கு இயற்கையான, தாவர அடிப்படையிலான உணவுகளைத் தேர்ந்தெடுத்து, ஐந்து சக்திகளின் சமநிலையைப் பேணுவது அவசியம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.