சத்தான காலை உணவு சாப்பிட வேண்டும் என்றால் பருப்பு கீரை அடையை சமைத்து பாருங்க.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு
கடலை பருப்பு
உளுந்தம் பருப்பு
பச்சரிசி
புழுங்கல் அரிசி
முருங்கைக் கீரை
தேங்காய் துருவல்
காய்ந்த மிளகாய்
உப்பு
பெருங்காயம்
செய்முறை: பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். முருங்கைக்கீரையை எண்ணெய் சேர்த்து வதக்க வேண்டும். ஊறவைத்த பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாய், துருவ தேங்காய் ஆகியவற்றை அரைத்துகொள்ள வேண்டும். இத்தோடு கீரையை சேர்த்து அடை சுட்டு எடுக்க வேண்டும்.