இந்த புலாவை தினையை ஊற வைத்து செய்ய வேண்டும். சுகர் பேஷண்ட்ஸ் மற்றும் உடல் எடை குறைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் தினை
2 கப் தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
நறுக்கிய வெங்காயம்
பூண்டு
சீரகம்
மல்லி பொடி
மிளகாய் பொடி
நறுக்கிய கேரட்
பச்சை பட்டாணி
உப்பு
நறுக்கிய கொத்தமல்லி
செய்முறை: தினையை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்க்க வேண்டும். தொடர்ந்து நறுக்கிய வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வறுபட்டதும் மஞ்சள் பொடி, மல்லி பொடி, மிளகாய் பொடி சேர்த்து வதக்க வேண்டும். நறுக்கிய கேரட், பச்சை பட்டாணியை சேர்க்க வேண்டும். தற்போது சிறிது தண்ணீர் ஊற்றி காய்கறிகளை சேர்க்க வேண்டும். தொடர்ந்து ஊறவைத்த தினையை சேர்க்கவும்.உப்பு சேர்த்து எல்லாவற்றையும் கலந்துவிடவும். 20 நிமிடங்கள் கழித்து தினை உப்புமா ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil