வரகு அரிசி உடலுக்கு நல்லது. அதை வைத்து இப்படி இட்லி செய்யுங்கள்.
வரகு அரிசி – 1 கப்
புழுங்கலரிசி – ½ கப்
உளுந்தம் பருப்பு- ½ கப்
உப்பு
செய்முறை : வரகு அரிசியையும் அரிசியையும் தனியாக 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு வரகு அரிசியை நன்றாக அரைத்தெடுக்கவும். உளுத்தம்பருப்பை தண்ணீர் தெளித்து, அதிக மாவு கிடைக்கும் வரை அரைத்தெடுங்கள். தொடர்ந்து அரிசியையும் தண்ணீர் விட்டு அரையுங்கள். இந்த மூன்று மாவையும் கலந்து 5 முதல் 6 மணி நேரம் புளிக்க வையுங்கள். அடுத்த நாள் இட்லி சூப்பராக சுடலாம்.