வெள்ளை சர்க்கரை மற்றும் இனிப்பை ஒட்டுமொத்தமாக ஒரு வாரம் வரை கைவிட வேண்டும். இதை நீங்கள் செய்தால் நல்ல மாற்றங்களை பார்க்க முடியும்.
குறிப்பாக சர்க்கரை கை விடுவதால் ரத்த சர்க்கரை அதிகரிக்காது. வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக ஆபத்தில்லாத செயற்கை இனிப்பு பொடியை நாம் பயன்படுத்தலாம். மேலும் சாப்பிட்ட பின் அதிகரிக்கும் ரத்த சர்க்கரை அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.
இந்நிலையில் வயிறு உப்புதல், வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்றுபோக்கை குறைக்கும். சர்க்கரையை கைவிடுவதால் ஜீரண சக்தி அதிகமாகும்.
உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கும். சர்க்கரை சாப்பிட்டால் உடல் எளிதாக சோர்வடையும். மேலும் உடலில் வீக்கம் வரும் . சர்க்கரையை கைவிடுவதால் இதை கட்டுபடுத்த முடியும்.
நல்ல தூக்கம் வரும். நாம் அடிக்கடி சர்க்கரை அதிகமாக டீ அல்லது காப்பி குடித்தால் நமது தூக்கம் தடைபடும். இதனால் சர்க்கரை கைவிட்டால் நல்ல தூக்கம் வரும்.
இது போல உடல் எடை நன்றாக குறையும். இதனால் நமக்கு கூடுதல் சக்தி கிடைக்கும்.