எந்த காய்கறியும் தேவை இல்லை; அரிசி, பருப்பு போதும்... 10 நிமிடத்தில் டேஸ்டி சாதம் ரெடி!

எந்த காய்கறியும் இல்லாமல் ஈஸியாக அரிசி, பருப்பு சாதம் சட்டென்று 10 நிமிடத்தில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.. குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ் ரெஸிபி ஒருநாள் இப்படி செய்து கொடுங்க டேஸ்ட் மறக்கவே மாட்டாங்க…

எந்த காய்கறியும் இல்லாமல் ஈஸியாக அரிசி, பருப்பு சாதம் சட்டென்று 10 நிமிடத்தில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.. குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ் ரெஸிபி ஒருநாள் இப்படி செய்து கொடுங்க டேஸ்ட் மறக்கவே மாட்டாங்க…

author-image
WebDesk
New Update
paruppu saadham

காய்கறி இல்லாமல் அரிசி பருப்பு சாதம்

கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்டங்களில் மிகவும் ஃபேமஸான அரிசி பருப்பு சாதம் மிகவும் சுவையாகவும் சிம்பிளாகவும் காய்கறிகள் இல்லாமல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

அரிசி
துவரம் பருப்பு
கடுகு & உளுத்தம் பருப்பு
பெருஞ்சீரகம் 
சீரகம்
வெந்தயம்
காய்ந்த மிளகாய்
பச்சை மிளகாய்
சின்ன வெங்காயம்
மிளகு
பூண்டு
தக்காளி
மஞ்சள் தூள்
பெருங்காயத் தூள்
மிளகாய் தூள்
நெய்
எண்ணெய் 
உப்பு 

(மேற்குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் நீங்கள் உணவு சமைப்பதற்கு ஏற்ப எடுத்து கொள்ளலாம்.)

Advertisment
Advertisements

இந்த முறையில் மிகவும் எளிமையாக அரிசி பருப்பு சாதத்தை குக்கரில் செய்துவிடலாம். அரிசியையும் பருப்பையும் ஒரு இரண்டு மூன்று முறை நன்கு தண்ணீர் விட்டு கழுவி ஒரு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு போட வேண்டும் கடுகு நன்கு வெடித்து வந்ததும் அதில் சோம்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து வதக்கவும்.

இதில் காரத்திற்கு ஏற்ப தேவையான அளவு காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். அதில் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் 10 மிளகு, பூண்டு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கி பொன்னிறமானவுடன் அதில் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அதில் மஞ்சள் தூள் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி விடவும். இதில் அரை டீஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்தால் சுவையும் நிறமும் திடமாக இருக்கும்.

சாதம் குழைய விட்டு சாப்பிட வேண்டும் என்றால் ஒரு அரை கப் தண்ணீர் அதிகமாக ஊற்ற வேண்டும், விதை விதையாக வேண்டும் என்றால் தேவையான அளவு தண்ணீர் ஊற்றினால் போதும். எனவே அதற்கு ஏற்றார்போல்  தண்ணீர் ஊற்றி கொஞ்சம் அதிகமாக உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

 குறிப்பாக உப்பு கொஞ்சம் அதிகமாக சேர்க்கும் போது தான் சாப்பாட்டுடன் வெந்து உப்பு சரியான அளவில் இருக்கும். ஒரு கொதி வந்தவுடன் அதில் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பை சேர்க்க வேண்டும். பின்னர் கடைசியாக ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும். ஒரு மூன்று விசில் வந்த உடன் ஒரு ஐந்து நிமிடம் சிம்மிலேயே வைத்து வேக வைக்க வேண்டும். 

விசில் அடங்கியவுடன் திறந்து பார்த்தால் சுவையான சூடான அரிசி பருப்பு சாதம் ரெடி ஆகி விடும். இதனை அப்படியே சாப்பிடலாம் இல்லை என்றால் சட்னி, முட்டை தொக்கு வைத்தும் சாப்பிடலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil 

Rice Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: