நம்ம டிபனுக்கு இட்லி மாவு இல்லை என்ற கவலை இனி வேண்டாம். குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பிச் சாப்பிடும் வகையில், மிக மிக மென்மையான மற்றும் சுவையான ரவை தோசையை உடனடி சட்னியுடன் 20 நிமிடத்தில் எப்படி செய்வது ஃபூடிஸ்தமிழாசார்ட்ஸ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
வறுக்காத ரவை - 1 கப் உருளைக்கிழங்கு - 1 (தோல் சீவி, கழுவியது) தண்ணீர் - தேவைக்கேற்ப வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 1-2 (நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது) தக்காளி - 1 (விதை நீக்கி, நறுக்கியது) கேரட் - 1 (துருவியது) உப்பு - தேவையான அளவு சோடா உப்பு
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு கப் வறுக்காத ரவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக்கி எடுக்கவும். பொடித்த ரவையுடன், தோல் சீவி கழுவிய உருளைக்கிழங்கைச் சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நல்ல நைசாக அரைத்து எடுக்கவும்.
அரைத்த மாவை ஒரு பவுலில் சேர்த்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, விதை நீக்கிய தக்காளி மற்றும் துருவிய கேரட் சேர்த்து நன்கு கலக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு சோடா உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை கலந்து, மாவை 5 நிமிடங்கள் ஊறவிடவும்.
சட்னிக்குத் தாளித்த அதே கரண்டியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். கலந்து வைத்த ரவை தோசை மாவை தாளிப்பு கரண்டியில் சேர்த்து, அடுப்பை சிம்ல வைத்து வேக விடவும். தோசையை இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுத்தால், சுவையான ரவை தோசை தயார்.
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 2 வரமிளகாய் - 4-5 பூண்டு - 5-6 பல் உப்பு - சிறிதளவு எண்ணெய் - 1 டீஸ்பூன் கடுகு - சிறிதளவு கடலைப்பருப்பு - சிறிதளவு உளுத்தம் பருப்பு - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
மிக்ஸி ஜாரில் ஒரு பெரிய வெங்காயம், இரண்டு தக்காளி, நாலஞ்சு வரமிளகாய், அஞ்சாறு பல் பூண்டு, சிறிதளவு உப்பு சேர்த்து அப்படியே பச்சையாக அரைத்து எடுத்தால் உடனடி சட்னி தயார். ஒரு தாளிப்பு கரண்டியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து கடுகு பொரிந்ததும், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இந்த சட்னியில் சேர்க்கவும்.