நாம் பல தானியங்களை வைத்து தானிய அடை செய்ய முடியும். இது ஆரோக்கியத்துக்கு நல்லது அதேவேளையில் சுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
பாசிப்பயிறு, சோளம், கோதுமை, கம்பு, ராகி, காராமணி
உளுந்து- தலா கால் கப்
பச்சரிசி- ½ கப்
சின்ன வெங்காயம்
காய்ந்த மிளகாய்
தேங்காய் துருவல்
இஞ்சி
பெருஞ்சீரகம்
சீரகம்
கொத்தமல்லி, கருவேப்பில்லை
உப்பு
நெய்
செய்முறை
எல்லா தானியங்கள் மற்றும் அரிசி, உளுந்துடன் இஞ்சி, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். 3 மணி கழித்து இதில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, சீரகம், தேங்காய் ஆகியவை சேர்த்து கலக்கவும். தோசை தவாவில் நெய் ஊற்றி அடையை மொறுமொறுப்பாக சுட்டு எடுக்கவும்.