வீட்டுல தேங்காய் இல்லையா? கவலையை விடுங்க; இத 2 வச்சு டேஸ்டி 'சட்னி' ரெடி பண்ணுங்க!

வெறும் இரண்டு பொருட்களை வைத்து சுவையான சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம். என்ன சட்னி செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் இந்த சட்னியை முயற்சி செய்யலாம்.

வெறும் இரண்டு பொருட்களை வைத்து சுவையான சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம். என்ன சட்னி செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் இந்த சட்னியை முயற்சி செய்யலாம்.

author-image
WebDesk
New Update
bottlegourd chutney

வெறும் இரண்டு பொருட்களை வைத்து சுவையான சட்னி எப்படி செய்வது என்று லைஃபின்காட்ஸ்லேண்ட் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். என்ன சட்னி செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் இந்த சட்னியை முயற்சி செய்யலாம். இதை செய்வதற்கு தேங்காய் கூட தேவையில்லை.

Advertisment

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 2 
பச்சை மிளகாய் - 2-3
பூண்டு - 3-4 பல்
பொட்டுக்கடலை - 1/4 கப்
புளி - 1 சிறிய துண்டு
உப்பு 
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

Advertisment
Advertisements

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்க வேண்டும். பின் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு பூண்டு பற்களை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். வதக்கிய பொருட்கள் ஆறியதும், அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் பொட்டுக்கடலை, புளி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெயை ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பொட்டுக்கடலை சட்னி தயார்.

Chutney Recipe Chutney

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: