பழங்களில் சுவை, ஊட்டம், சத்து எல்லாமே நிறைந்த ஒரு பழம் என்றால் அது பப்பாளி பழம். இந்த பப்பாளி பழத்தில் விட்டமின் ஏ நிறைந்து இருக்கிறது என்றும் பப்பாளி பழாம் சுகர் பேஷன்களுக்கு எனர்ஜி டானிக் இந்த பப்பாளி பழம் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைத்துள்ளார்.
பப்பாளி பழம் குறித்து மருத்துவர் சிவராமன் கூறுகையில், இந்த பப்பாளி பழம், சுவை, ஊட்டம், விட்டமின், சத்து நிறைந்தது, எல்லா வகையான விட்டமின், சத்துகள் நிறைந்துள்ளது. குறிப்பாக பப்பாளி பழம் கண் பார்வைக்கு நல்லது. பப்பாளி பழம் கண்ணைப் பாதுகாக்கிறது என்று கூறுகிறார்.
மேலும், “சர்க்கரை நோயாளிகள், மாம்பழம், சப்போட்டா போன்ற இனிப்பு சுவையுள்ள பழங்களை சாப்பிடக் கூடாது. உணவுக் கட்டுப்பாடு இல்லை என்றால், வாழைப்பழம்கூட சாப்பிடக் கூடாது. ஆனால், சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவில் பப்பாளி பழத்தை சாப்பிடலாம். தினமும் சில துண்டுகள் சாப்பிட்டால் உடலுக்கு நல்ல எனர்ஜி கிடைக்கும்.” என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
பெண்கள் சாப்பிட வேண்டிய மிகவும் சிறப்பான கனி ரகம் என்றால், ஒன்று பப்பாளி, இரண்டு மாதுளை என்று கூறும் மருத்துவர் சிவராமன், மாதுளை பழம் இருப்புச் சத்தைக் கொடுக்கும், சோகையைப் போக்கும், அதே போல, பப்பாளி பழம் கருப்பையை வலுப்படுத்தும் என்று கூறுகிறார்.
மேலும், இளம் வயதில் பூப்படைந்த பெண்கள், கருப்பையில் நீர்க்கட்டிகள் உள்ளவர்கள், சீரற்ற மாதவிடாய் உள்ளவர்கள் தினசரி பப்பாளி பழத்தை 10 - 15 துண்டுகள் சாப்பிட்டால் சரியாகும். ஒரு பெண் பூப்படைந்ததில் தொடங்கி, மெனோபாஸ் என்கிற பூப்பு முடிவடைவது வரை சீரான மாதவிடாய்க்கு பப்பாளி பழம் சாப்பிடுவது சிறந்தது, கருப்பை வலுவாக இருக்கும், ஹார்மோன்களின் சுழற்சி சீராக இருக்கும் என்கிறார்.
பப்பாளியை கருத்தரித்த பெண்கள் சாப்பிடக் கூடாது, சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது இது முழுமையாக உண்மை அல்ல என்று கூறும், மருத்துவர் சிவராமன், பப்பாளி உடலில் சூட்டை ஏற்படுத்தக்கூடியது என்பதால், கருத்தரித்த முதல் 3 மாதங்களில் தவிர்க்கலாம். அதிலும், ஒன்று இரண்டு துண்டுகள் சாப்பிடுவதால் எல்லாம் பிரச்னை இல்லை. கருத்தரித்த 3 மாதங்களுக்கு பிறகு, பப்பாளியை எடுத்துக்கொள்ளலாம். பப்பாளியில் உள்ள சிவந்த நிறம் புற்றுநோய் வராமல் தடுக்கிறது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
மேலும், பப்பாளி பழத்தை நன்றாக தோல்களை நீக்கி சாப்பிட வேண்டும், பப்பாளி பழத்தை துண்டுகளாக நறுக்கி ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடக் கூடாது. பப்பாளி பழத்தின் தோல்களை நீக்கிய பிறகு, உடனே சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“