பழங்களிலே அதிக நன்மைகளை தரும் பழமாக இருப்பது பப்பாளி பழம்தான். குறைந்த விலையில் தேவையான அனைத்து சத்துக்களையும் பப்பாளிப் பழம் தருகிறது. இந்நிலையில் பழத்தில் மட்டும் இல்லை இதன் இலைகளிலும் முக்கிய கூறுகள் இருக்கிறது. இந்நிலையில் மலேரியா காய்ச்சலுக்கு எதிராக செயல்படுகிறது. ரத்தத்தின் பிலேட்டுகள் அதிகரிக்கவும் உதவுகிறது. டெங்கு காய்ச்சலுக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய வைத்தியமாக பப்பாளி இலை இருக்கிறது.
இந்நிலையில் பப்பாளி இலைகளை நன்றாக கழுவிய பிறகு காய வைத்துவிடுங்கள். முழுவதுமாக காய வைக்க வேண்டும் என்பதில்லை. மேலும் இந்த இலைகளை 2 லிட்டர் தண்ணீரில் சேர்த்து, நன்றாக கொதிக்க வைக்கவும். இதன் அளவு பாதி ஆனதும், அதை வடி கட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு நாளைக்கு இந்த பானத்தை 2 முதல் 3 முறை குடித்தால் நல்லது. இந்நிலையில் பச்சை இலையை அப்படியே புழிந்து அதன் சாறை அப்படியே குடிக்கலாம். கசந்தாலும், இதன் பலன் நன்றாக உங்களுக்கு கிடைக்கும்.