/tamil-ie/media/media_files/uploads/2022/06/pa.jpg)
உடல் எடையை குறைப்பதற்கும், சக்கரை நோயை கட்டுபடுத்துவதற்கும் வரப்பிரசாதமாக இருக்கும் ஒரே பழம் பப்பாளி. இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை இருப்பதால் பப்பாளி ஆரோக்கியத்தை அள்ளித் தரும் பழமாக இருக்கிறது. ஆனால் சில உணவுகளுடன் பப்பாளி பழத்தை நாம் சேர்த்து சாப்பிட்டுவிடக்கூடாது. சில நேரங்களில் நம் உயிரைக்கூட பறித்துவிடும்.
மேலும் பப்பாளி பழத்தில் நார்சத்து, புரத சத்து, கார்போஹைடேர்ட், வைட்டமி சி, ஏ, ஈ, பி மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. இதனால் புதிய ரத்த அணுக்கள் உருவாகும். இதில் குறைந்த கிளைஸிமிக் இண்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் அதிகம் சாப்பிடலாம். மேலும் இதில் இருக்கும் பாப்பின் என்ற என்சைம் (enzyme) அலர்ஜி வருவதை தடுக்கிறது. மேலும் காயங்கள் விரைவில் குணமாக உதவுகிறது.
பப்பாளியை மற்றும் எலுமிச்சையை
ஒரு போதும் பப்பாளியோடு எலுமிச்சை சேர்த்து சாப்பிட வேண்டாம். பப்பாளி சாலட்டில் எலுமிச்சை பழம் சேர்த்தால் அது நஞ்சாக மாறிவிடும். மேலும் இதனால் ரத்த சோகை நோய் ஏற்படும்.
மேலும் ஒரு கப் பப்பாளிப் பழம் அல்லது 3 துண்டுகள் தான் தினமும் சாப்பிட வேண்டும் . அதிகமாக பப்பாளி சாப்பிட்டால் மயக்கம், தலை வலி, வீக்கம் ஏற்படலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.