/tamil-ie/media/media_files/uploads/2023/04/papya.jpg)
மாதவிடாய் காலங்களில், இந்த உணவை எடுத்துக்கொள்ளாமா வேண்டாமா என்ற கேள்வி எழும் . அதில் முக்கியமான உணவாக இருப்பது பப்பளி பழம். இந்நிலையில் பச்சையான பப்பாளியை மாதவிடாய் அல்லது கருவுற்ற காலத்தில் சாப்பிட கூடாது என்று கூறப்படுகிறது.
இதில் இருக்கும் லாக்டஸ் மற்றும் பப்பைன் ஒருவித ஒவ்வாமையை அதிகரிக்கும். இதனால் பச்சை பப்பாளியை இந்த காலங்களில் தடுக்கலாம். ஆனால் பழுத்த பப்பாளியை சாப்பிடலாம். இது ஒருவகையான சூடு உணவாகும். ஆனாலும் இதை நாம் சாப்பிடலாம்.
உடலுக்கு தேவையான சத்துக்கள், மினரல்ஸ் இருக்கிறது. இதனால் மாதவிடாய் சுழற்சியை சீராக வைத்துக்கொள்ள உதவும். கூடுதலாக வயிறு உப்புதல், மலச்சிக்கல் ஏற்படாது.
மேலும் இதில் நார்சத்து, என்சைம் மற்றும் க்ளைகோசிடஸ் (glycosides) இருக்கிறது. மேலும் இதில், கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் இருக்கிறது.
கர்ப்பபை சதைகளுக்கு, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பப்பாளியில் உள்ள கரோட்டீனி, மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியை குறைக்கிறது.
இதில் இருக்கும் நார்சத்து மற்றும் தண்ணீர் சத்து வயிற்று பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறது. இதனால் மாதவிடாய் காலங்களில் மலச்சிக்கல் ஏற்படாது.
பப்பாளி சாப்பிடுவதால், நமது கர்ப்பபை விரிந்து, சுருங்கும் தன்மை அதிகரிக்கும். இதில் இருக்கும் கெரோட்டினி என்ற சத்து, ஈஸ்டோஜன் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் மாதவிடாய் சரியான நேரத்தில் வரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.