குழம்பு வைக்க சலிப்பாக இருக்கும் காலத்தில் இது போன்று பருப்பு பொடியை செய்து நெய் விட்டு சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – 1 கப்
உளுந்தம் பருப்பு – 1 கப்
துவரம் பருப்பு – அரைக் கப்
மிளகு -கால் கப்
கறிவேப்பிலை
பெருங்காயம்
உப்பு
செய்முறை : ஒரு பாத்திரத்தை நன்றாக சூடு செய்து அதில் கடலை பருப்பை வறுத்து எடுக்கவும். தொடர்ந்து உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பை வறுக்கவும். தொடர்ந்து இதுபோல மிளகு, கறிவேப்பிலையை வறுக்கவும். இவை ஆனைத்தும் ஆறியதும், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.