இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையான புதினா சட்னி எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
தேங்காய் துருவல் - சிறிதளவு
புதினா - 1 கப்
கொத்தமல்லி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறிதளவு
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
உளுந்தம் பருப்பு - டீஸ்பூன்
செய்முறை
முதலில் புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி, புதினாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆறவைக்கவும். இப்போது அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும். அதோடு வேர்க்கடலை, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்து அரைக்கவும்.
அடுத்ததாக, அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். இப்போது அதை சட்னியில் சேர்த்து கலக்கவும். அவ்வளவுதான் புதினாவில் வேர்க்கடலை சேர்க்கும் போது வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். இதை இட்லி, தோசை உடன் வைத்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“