பிரண்டை மூட்டு வலி, மூட்டு தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகும். பிரண்டையில் துவையல் செய்து வாரம் 2 முறை சாப்பிடுவது நல்லது.
Advertisment
தேவையானவை
பிரண்டை நல்லெண்ணை வரமிளகாய் - 10 உளுந்தம்பருப்பு பூண்டு- 50 கிராம் சின்ன வெங்காயம் தேங்காய் தக்காளி புளி தண்ணீர் உப்பு
இலைகளை நீக்கி பிரண்டை மட்டும் எடுத்துக் கொள்ளவும். நல்லெண்ணை ஊற்றி வரமிளகாய், உளுந்து சேர்க்கவும். அடுத்து பூண்டு சேர்த்து வதக்கி சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்தாக பிரண்டையை சேர்க்கவும். பிரண்டை 2 நிமிடம் நன்கு வதங்க வேண்டும். 2 தக்காளி சேர்த்து வதக்கிய பின் கருப்பு எள் சேர்த்து வதக்கவும். 25 கிராம் புளி எடுத்து தண்ணீர் போட்டு கரைத்து ஊற்றவும்.
Advertisment
Advertisements
அடுத்தாக தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி தேங்காய் போட்டு மீண்டும் அடுப்பில் வைத்து வதக்கவும். கடைசியாக கொத்தமல்லி சேர்த்து பெருங்காய் தூள் சேர்த்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தால் பிரண்டை துவையல் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news