தோசை செய்வதில் அளவுதான் எப்போதும் முக்கியம். 4 கப் அரிசி மற்றும் ஒரு கப் உளுந்தை இரவு 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இதனை தனியாக அரைத்து ஒன்றாக சேர்க்க வேண்டும்.
இந்த அரிசி மற்றும் உளுந்தை பெரிய பாத்திரத்தில் போட வேண்டும். சிறு பாத்திரத்தில் போடக் கூடாது. மாவை கட்டியாகவோ இல்லை தண்ணியாகவோ கரைக்க வேண்டாம். தோசை ஊற்றும் பதத்திற்கு கரைக்க வேண்டும். 8 மணி நேரம் தோசை மாவு புளிக்க வேண்டும். குளிர் பிரதேசங்களில் 15 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
தோசை மாவை அரைத்தவுடன் குளிர்சாதனப்பெட்டியில் வைக்க வேண்டாம். அது தோசை மாவு புளிப்பதை தடுக்கும்.
சூடான தோசை தவாவில் தோசை ஊற்ற வேண்டும். சிறுது தண்ணீர் தெளித்து அதன் பின் எண்ணெய் ஊற்றி மாவை ஊற்றவும்.